காவிரி உரிமை மீட்பு பயணம் 7-ம் தேதி திருச்சியில் துவக்கம்!

காவிரி உரிமை மீட்பு பயணத்தை 7-ஆம் தேதி திருச்சி முக்கொம்புவில் இருந்து துவங்குகிறார் மு.க.ஸ்டாலின்.....!

Last Updated : Apr 4, 2018, 09:14 AM IST
காவிரி உரிமை மீட்பு பயணம் 7-ம் தேதி திருச்சியில் துவக்கம்!  title=

காவிரி நதிநீர் பங்கீட்டில் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வரும் தமிழகம், தங்கள் உரிமைக்காக பல வழக்குகளை நீதிமன்றத்ததில் போட்டது. அந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிமன்றம், கடந்த மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது. 

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு கடந்த மார்ச் 29-ம் தேதி முடிவடைந்த நிலையில், இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வரும் நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று திமுக செயல் தலைவர் முக ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். 

இதை தொடர்ந்து, திமுக செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் காவிரி மீட்பு பயணத்தை வரும் 7-ம் தேதி திருச்சி முக்கொம்புவில் தொடங்க உள்ளார். 

காவிரி உரிமை மீட்பு பயணத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்கின்றன. திருச்சியில் இருந்து சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம்  நடைபெற உள்ளது. 

Trending News