மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் திட்டம்.
இதன் திட்டத்தின் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினை பாதுகாக்கும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த முதலீட்டு திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆகும் சமயத்தில் கணக்கு மூடப்படும்.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் வட்டி விகிதம் 9.1% ஆக இருந்தது. இதன் பின்னர், வட்டி விகிதம் 9.2 சதவீதமாக அதிகரித்தது, ஆனால் பின்னர் அது தொடர்ந்து வட்டி விகிதங்கள் குறைந்ததை அடுத்த 2020-21 நிதியாண்டு வரை 7.6 சதவீத வட்டி கொடுக்கப்படுகிறது, இது 2021 ஏப்ரல் 1 க்குப் பிறகும் தொடரும்.
சுகன்யா சமிர்தி யோஜனாவில் முதலீடு செய்வதால், பல நன்மைகள் உள்ளன.
1. சுகன்யா சம்ரிதி கணக்கை பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர்களால் பெண் குழந்தையின் பெயரில் மட்டுமே தொடக்க முடியும்
2. கணக்கு தொடங்கும் போது பெண்ணின் வயது 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்
3. ஒரு மகளுக்கு ஒரே ஒரு கணக்கை மட்டுமே தொடக்க முடியும்
4. ஒரு குடும்பத்திற்கு இரண்டு SSY கணக்குகளை தொடங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
ALSO READ | Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது
இந்த திட்டத்தில் கணக்கை தொடக்க உங்களுக்கு அருகிலுள்ள ஒரு தபால் அலுவலகம் அல்லது சில பொது மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் மூலம் முதலீடு செய்யலாம். இதற்காக, நீங்கள் தேவையான படிவம் மற்றும் காசோலை / வரைவு மூலம் ஆரம்ப வைப்புத்தொகையுடன் பாஸ்போர்ட், ஆதார் அட்டை போன்ற KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகளைத் தவிர, ரிசர்வ் வங்கியின் வலைத்தளத்திலிருந்து SSY க்கான புதிய கணக்கு விண்ணப்ப படிவத்தையும் பதிவிறக்கம் செய்யலாம். இந்தியா போஸ்டின் வலைத்தளம், ஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா SBI, பஞ்சாப் நேஷனல் வங்கி PNB, பேங்க ஆப் பரோடா BOB ஆகியவற்றின் வலை தளத்தில் இருந்தும் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி போன்ற தனியார் துறை வங்கிகளிடமிருந்தும் நீங்கள் படிவத்தைப் பெறலாம்.
சுகன்யா சம்ரிதி கணக்கில் நீங்கள் ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சமாக 250 ரூபாய் டெபாசிட் செய்யலாம் மற்றும் அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். கணக்கைத் திறந்த பிறகு தொடர்ந்து 15 வருடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையை நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, கணக்கின் முதிர்வு வரை வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
பிபிஎஃப் (PPF), சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) ஆகிய இரு திட்டங்களுமே, மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக உள்ள முதலீட்டு திட்டங்கள் ஆகும்.
பிபிஎஃப் மற்றும் சுகன்யா சமிர்தி திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மகளின் பெற்றோருக்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். வருமான வரி பிரிவு 80 சி இன் கீழ், ஆண்டுக்கு ரூ .1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
ALSO READ | வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரிய அடி: ஏப்ரல் 1 முதல் OTP பெறுவதில் பிரச்சனை வரும்
பிபிஎப்பில் முதலீடு மற்றும் வட்டி விகிதங்கள்
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது வரி இல்லாத சேமிப்புத் திட்டமாகும், இதன் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் SSY போலவே நிர்ணயிக்கப்படுகின்றன. சுகன்யா சம்ரிதியுடன் ஒப்பிடுகையில், இரண்டின் அம்சங்களிலும் பெரிய வித்தியாசம் உள்ளது. பிபிஎப்பில் வேண்டுமானாலும் கணக்கை தொடங்கலாம். ஆனால் எஸ்.எஸ்.ஒய் என்பது மகள்களுக்கு மட்டுமேயான ஒரு திட்டமாகும்.
வட்டி விகிதங்கள்
சுகன்யா சம்ரிதி - 7.6%
பிபிஎஃப் - 7.1%
ஆரம்ப முதலீட்டு தொகை
சுகன்யா சம்ரிதி - 1000 ரூபாய்
பிபிஎஃப் - 100 ரூபாய்
குறைந்தபட்ச முதலீடு
சுகன்யா சம்ரிதி - 250 ரூபாய்
பிபிஎஃப் - 500 ரூபாய்
வரி விலக்கு
சுகன்யா சம்ரிதி 1.5 லட்சம் ரூபாய்
பிபிஎஃப் 1.5 லட்சம் ரூபாய்
முதிர்ச்சி
சுகன்யா சமிர்தி 21 ஆண்டுகள்
பிபிஎஃப் 15 ஆண்டுகள்
கடன் வசதி
சுகன்யா சம்ரிதி - இல்லை
பிபிஎஃப் ஆம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR