இந்திய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; பட்டம் பெற்ற பின் 2 ஆண்டு வேலை!

இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் பட்டம் பெற்ற பிறகு இரண்டு ஆண்டுகள் அங்கேயே வேலை செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது!! 

Last Updated : Sep 11, 2019, 02:52 PM IST
இந்திய மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்; பட்டம் பெற்ற பின் 2 ஆண்டு வேலை! title=

இந்திய மாணவர்கள் இங்கிலாந்தில் பட்டம் பெற்ற பிறகு இரண்டு ஆண்டுகள் அங்கேயே வேலை செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது!! 

பிரிட்டனில் தங்கி படிக்கும் பல உலக நாடுகளை சேர்ந்த மாணவர்கள் படித்து பட்டம் பெற்றபின், இரண்டு ஆண்டுகள்வரை பிரிட்டனில் தங்கி வேலை தேடி கொள்ள அனுமதிக்கப்படுவர் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இதன்மூலம், 2012 ஆம் பிரிட்டன் உள்துறை செயலராக இருந்த தெரீசா மே எடுத்த முக்கிய முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தெரீசா மே காலத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர் பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றபிறகு 4 மாதங்களுக்குள் சொந்த நாட்டுக்கு திரும்பிவிட வேண்டும் என்ற சட்டத்தை தற்போது திருத்தம் செய்துள்ளனர். 

புதிதாக பிரதமராக பதவியேற்றுள்ள போரிஸ் ஜான்சன், மாணவர்கள் பிரிட்டனில் வேலைவாய்ப்பை தொடங்கவும், முழு திறனை வெளிப்படுத்தவும் இந்த மாற்றம் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், அரசின் இந்த முடிவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மைக்ரேஷன் வாட்ச் என்ற பிரசார குழு, அரசின் நடவடிக்கை பிற்போக்கானது என குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த திட்டம் பிரிட்டன் கல்லூரிகளில் 2020-21 ஆண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்பட்ட படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொருந்தும். மேலும், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் குடியேற்றத்துக்கான ஆவணங்களை சரியாக வைத்திருத்தல் அவசியம். 

பிரிட்டன் அரசின் இந்த அறிவிப்புக்கும், UK பயோபேங்கின் 200 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்ட மரபியல் திட்டத்தின் தொடக்கத்துடன் ஒத்து போகிறது. சுமார் 5 லட்சம் பிரித்தானியர்களிமிருந்து பெறப்பட்ட தரவுகள் மற்றும் மாதிரிகளை இந்த UK பயோபேங்க் கொண்டுள்ளது. பல ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை உலகிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயன்படுத்தி கொண்டு நோய்களுக்கான புதிய சிகிச்சைகளை கண்டுபிடிக்கலாம்.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் கூறுகையில்; "புதிய பட்டதாரி செயல் திட்டம் அறிவியல் மற்றும் கணிதம் அல்லது தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் திறமையான சர்வதேச மாணவர்கள் இங்கிலாந்தில் படிக்க முடியும், பின்னர் அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க செல்லும்போது மதிப்புமிக்க பணி அனுபவத்தைப் பெற முடியும்" என்று கூறினார்.

 

Trending News