டிக்கெட் புக் பண்ண போறீங்களா? விதிகளை மாற்றியது ரயில்வே

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்தால், இந்த முறை பயணம் செய்வதற்கு முன், ரயில்வே டிக்கெட் முன்பதிவு முறையை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.v

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 11, 2022, 05:02 PM IST
  • இந்திய ரயில்வே விதிகள்
  • டிக்கெட் முன்பதிவு விதிகள்
  • தெரிஞ்சிக்கோங்க இல்லனா சீட் கிடைக்காது
டிக்கெட் புக் பண்ண போறீங்களா? விதிகளை மாற்றியது ரயில்வே title=

IRCTC டிக்கெட் முன்பதிவு விதிகள்: நீங்கள் ரயில் பயணத்திற்கும் முன்னுரிமை அளித்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் மாற்றப்பட்ட விதிகளை அறிந்து கொள்வது அவசியமாகும். உண்மையில், ஐஆர்சிடிசி பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. ரயில்வேயால் மாற்றப்பட்ட விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்ய உங்கள் கணக்கைச் வெரிஃபை செய்ய வேண்டும்.

மொபைல் மற்றும் ஈமெயில் ஐடி வெரிஃபை
ஐஆர்சிடிசி படி, இப்போது பயனர்கள் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் மொபைல் எண் மற்றும் ஈமெயில் ஐடியை வெரிஃபை செய்ய வேண்டியது அவசியமாகும். ஈமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் வெரிஃபை இல்லாமல், ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாது. மேலும் நீங்கள் நீண்ட காலமாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவில்லை என்றால், இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். அதன்படி இப்போது டிக்கெட்டை முன்பதிவு செய்ய, நீங்கள் முதலில் வெரிஃபை செய்ய வேண்டும். அதன் செயல்முறையை தெரிந்து கொள்வோம்...

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 44%-க்கும் மேலாக அதிகரிக்கும் ஊதியம்

மொபைல் மற்றும் ஈமெயில் ஐடி வெரிஃபை எப்படி செய்வது
ஐஆர்சிடிசி ஆப்ஸ் அல்லது இணையதளத்திற்குச் சென்று வெரிஃபை சாளரத்தில் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை இங்கே உள்ளிடவும். இரண்டு தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, வெரிஃபை பொத்தானைக் கிளிக் செய்யவும். இங்கே கிளிக் செய்தவுடன், உங்கள் மொபைலில் OTP வரும், அதை உள்ளிட்டு மொபைல் எண்ணை சரிபார்க்கவும். ஈமெயில் ஐடியில் பெறப்பட்ட குறியீட்டை உள்ளிட்ட பிறகு, உங்கள் மெயில் ஐடி வெரிஃபை ஆகிவிடும்.

ஒரு கணக்கிலிருந்து 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யலாம்
முன்பதிவு செய்யப்படும் ஐஆர்சிடிசி கணக்கின் ஒரு பயனர் ஐடியில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 12ல் இருந்து 24 ஆக ரயில்வே உயர்த்தியுள்ளது. ஆதார் இணைக்கப்பட்ட பயனர் ஐடி மூலம் ஒவ்வொரு மாதமும் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்னதாக இந்த எண்ணிக்கை 12 ஆக இருந்தது. அதே சமயம் உங்கள் கணக்குடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், நீங்கள் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

 

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News