பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹ 0.50 - ₹ 1 வரை உயர்வு?

Euro-VI உமிழ்வு-இணக்கமான அதி-சுத்தமான ஆட்டோ எரிபொருட்களைப் பயன்படுத்த இந்தியா முனைந்து வரும் நிலையில், ​​ஏப்ரல் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

Last Updated : Jan 31, 2020, 07:48 AM IST
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹ 0.50 - ₹ 1 வரை உயர்வு? title=

Euro-VI உமிழ்வு-இணக்கமான அதி-சுத்தமான ஆட்டோ எரிபொருட்களைப் பயன்படுத்த இந்தியா முனைந்து வரும் நிலையில், ​​ஏப்ரல் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா முதல் 1 ரூபாய் வரை உயரக்கூடும் என கூறப்படுகிறது.

தற்போது, ​​Euro-VI உமிழ்வு-இணக்க எரிபொருளுக்கு சமமான BS-IV தர எரிபொருள் நாட்டில் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் வாகன உமிழ்வைக் குறைக்க BS-VI தர எரிபொருளை ஏப்ரல் 2020 முதல் பாய்ச்சுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தேசிய தலைநகரம் மற்றும் பிற நகரங்களில் மாசு அதிகரிப்பதற்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த எரிபொருள் மாற்று மாசுவை குறைக்கும் என்ற முயற்சியில் இது மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் சஞ்சீவ் சிங், நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் BS-VI தர எரிபொருளை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளதாகவும், இது அடுத்த மாதத்திற்குள் நாடு முழுவதும் டிப்போக்களை எட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில் "நாங்கள் ஏப்ரல் 1 காலக்கெடுவை மிகவும் ஒட்டிக்கொண்டிருக்கிறோம், ஏப்ரல் 1 முதல் நாட்டில் 100 சதவீத பெட்ரோல் மற்றும் டீசல் BS- VI இணக்கமாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.36 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.36-ஆகவும் உள்ளது.

  • சென்னை

    பெட்ரோல் (₹/L)

    76.19-0.25

  • டெல்லி

    பெட்ரோல் (₹/L)

    73.36-0.24

  • கொல்கத்தா

    பெட்ரோல் (₹/L)

    75.99-0.23

  • மும்பை

    பெட்ரோல் (₹/L)

    78.97-0.24

 

 

 

 

தூய்மையான எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தனது சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த ரூ.17,000 கோடியை முதலீடு செய்தது, அதே நேரத்தில் ரூ.30,000 கோடி செலவிட்டது.

"ஏப்ரல் முதல் BS-VI எரிபொருளை வழங்குவதன் தாக்கங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்," என்று அவர் கூறினார், BS-VI  தரத்துடன் இணக்கமான பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சர்வதேச அளவுகோல் விலை BS-IV எரிபொருளை விட அதிகமாகும் மற்றும் உள்நாட்டு எரிபொருள் விலைகள் உலகளாவிய விகிதங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன, இதன் காரணமாக பம்ப் விலைகள் உயர வாய்ப்புள்ளது.

(ஜனவரி 31, 2020)

  • சென்னை

    டீசல் (₹/L)

    70.09-0.24

  • டெல்லி

    டீசல் (₹/L)

    66.36-0.22

  • கொல்கத்தா

    டீசல் (₹/L)

    68.72-0.22

  • மும்பை

    டீசல் (₹/L)

    69.56-0.23

 

 

 

 

"BS-VI பிரீமியம் தடுமாறும் அளவுக்கு பெரியதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்றும் அவர் கூறினார், BS-VI தர எரிபொருள் நாடு முழுவதும் உருட்டப்படும்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ஒரு முறை உயர்வு இருப்பதைக் காணலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முன்னேற்றத்தில் சரியான வேலைபாடு இருக்கும் பட்சத்திலும், எரிபொருள் விலை அதிகரிப்பு லிட்டருக்கு ரூ. 0.50 முதல் ரூ.1 வரை இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எரிபொருள் மேம்படுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, 1990-களின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட வாகன மாசுபாடு விதிமுறைகள் காலப்போக்கில் மிகவும் கடுமையாகின. தற்போதைய BS-IV விதிமுறைகள் முறையே 2005 மற்றும் 2010-ல் அமல்படுத்தப்பட்ட BS-II மற்றும் BS-III விதிமுறைகளுக்குப் பிறகு 2017-ல் செயல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News