SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா!

SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2024, 12:55 PM IST
  • SIP: நீண்ட கால முதலீட்டில் மிகப் பெரிய அளவில் நிதியை உருவாக்க முடியும்.
  • பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
  • மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எளிமையானது.
SIP Calculator: மாதம் ரூ.5000 முதலீடு போதும்... அதனை ஒரு கோடியாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா! title=

SIP - Mutual Fund Investment Tips in Tamil: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரம் ஆகலாம். பணத்தை திட்டமிட்டு சேமித்தால், கோடீஸ்வரனாக அதிக முதலீடு தேவையில்லை. SIP முதலீட்டில் உள்ள சாதகமான விஷயம் என்னவென்றால், அதில் மாதாந்திர முதலீட்டை ரூ. 500 உடன் தொடங்கலாம். முதலீட்டாளர் அவர்களின் வருமானம் அல்லது முதலீட்டுத் திறனுக்கு ஏற்ப SIP தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். 

மேலும், நிதி நெருக்கடி ஏற்படும் போது, உங்கள் SIP முதலீட்டை நிறுத்தியும் வைக்கலாம். நிதி நெருக்கடி தீர்ந்து, முதலீட்டு செய்யும் நிலை ஏற்படும் போது அதை மீண்டும் தொடங்கலாம். SIP  முதலீடு கூட்டு வட்டி பலனை வழங்குகிறது. எனவே நீண்ட கால முதலீட்டில் மிகப் பெரிய அளவில் நிதியை (Investment Tips) உருவாக்க முடியும்.

இந்தியாவில் பெரும்பாலானோர், பல வழக்கமான முதலீட்டுத் திட்டத்தை விட, பரஸ்பர நிதியத்தில் (SIP) முதலீடு செய்ய விரும்புகிறார்கள், ஏனெனில் SIP முதலீடுகள் வழக்கமான முதலீட்டு சுழற்சிகளில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றன. மேலும், வருமானத்தையும் அள்ளிக் கொடுக்கின்றன. 

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எளிமையானது மட்டுமல்ல, அபரிமிதமான வருமானத்தையும் தருகிறது. பணக்காரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற 30 வயதிலேயே முதலீட்டை தொடங்கினால் அதனை அடைவது மிக எளிது. கோடீஸ்வரராகும் கனவு மிகவும் கடினம் அல்ல, உங்களுக்கு தேவையானது சில திட்டமிடல் மட்டுமே. இந்த இலக்கை அடைய 30 வயதான இளைஞர் 17 ஆண்டுகள் தொடர்ந்து திட்டமிட்டு முதலீடு செய்தால், 47வது வயதில் அவர் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.

ரூ.5,000, ரூ.10,000, மற்றும் ரூ.15,000 என்ற அளவில் மாத எஸ்ஐபி முதலீட்டைத் தொடங்கி, இந்த முதலீடுகள் ஒவ்வொன்றிலும் 12 சதவீதம் வருமானம் பெற்றால், கோடீஸ்வரர் ஆக எவ்வளவு காலம் ஆகும் என்பதை எளிய கணக்கின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ரூ.5,000 எஸ்ஐபி முதலீட்டில் ரூ.1 கோடி சேமிப்பது எப்படி

மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியத்தில், ரூ.5,000 எஸ்ஐபியைத் தொடங்கிய நிலையில், 12 சதவீத வருமானத்தைப் கிடைத்தால், 26 ஆண்டுகளில் ரூ.1 கோடி நிதியை பெறலாம். இதில், நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ. 15,60,000 (ரூ. 15.60 லட்சம்), நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 91,95,560 (சுமார் ரூ. 92 லட்சம்), மற்றும் மொத்தமாக கையில் கிடைக்கும் தொகை ரூ. 1,07,55,560 (கிட்டத்தட்ட) ரூ 1 கோடி).

மேலும் படிக்க | PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

ரூ.10,000 எஸ்ஐபி முதலீட்டில் ரூ.1 கோடி சேமிப்பது எப்படி

நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ.10,000 மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP மூலம் முதலீடு செய்து, உங்கள் முதலீட்டில் 12 சதவீத லாபத்தைப் பெற்றால், 20 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ. 24,00,000 (ரூ. 24 லட்சம்) என்ற அளவில் இருக்கும். நீண்ட கால மூலதன ஆதாயங்கள் ரூ.75,91,479 (ரூ. 75.91 லட்சம்). உங்கள் கையில் கிடைக்கும் தொகை ரூ.99,91,479 (ரூ. 1 கோடிக்கு அருகில்) இருக்கும்.

ரூ.15,000 எஸ்ஐபி முதலீட்டில் ரூ.1 கோடி சேமிப்பது எப்படி

எஸ்ஐபியில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்து, உங்கள் முதலீட்டில் 12 சதவீத லாபத்தைப் பெற்றால், ரூ.1 கோடி நிதி பெற 17 ஆண்டுகள் ஆகும். 17 ஆண்டுகளில், உங்களின் மொத்த முதலீடு ரூ. 30,60,000 (ரூ. 30.60 லட்சம்) என்ற அளவில் இருக்கும். நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ. 69,58,812. உங்கள் கையில் கிடைக்கும் தொகை ரூ. 1,00,18,812 (ரூ. 1 கோடிக்கு மேல்) இருக்கும்.

இங்கே, சுவாரஸ்யமான கவனிப்பு என்னவென்றால், நீங்கள் ஒரு கோடியை பெற மாதம் ஒன்றுக்கு ரூ. 5,000 எஸ்ஐபி செய்யும் போது, உங்களின் மொத்த முதலீடு ரூ.15.60 லட்சம்; ரூ.10,000 எஸ்ஐபியில், உங்களின் மொத்த முதலீடு ரூ.24 லட்சம்; மற்றும் ரூ. 15,000 எஸ்ஐபியில், ரூ.1 கோடி நிதியை உருவாக்க உங்களின் மொத்த முதலீடு ரூ.30.60 லட்சமாகும். கூட்டு வட்டி பலனை பெற உங்கள் முதலீட்டு ஆண்டுகளின் எண்ணிக்கை மிகவும் முக்கியமானது என்பதை இது காட்டுகிறது.

(முக்கிய குறிப்பு - பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டது. எந்த விதமான முதலீடும் செய்வதற்கு முன், கண்டிப்பாக உங்கள் சந்தை நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.)

மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் வங்கிக் கட்டணம் வரை... இந்த விதிகள் மே 1 முதல் மாறும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News