7th Pay Commission: விரைவில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் பம்பர் ஏற்றம்

7th Pay Commission: 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கப்போகிறது. மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்ககூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 24, 2022, 10:51 AM IST
  • 7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி.
  • மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கப்போகிறது.
  • மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்ககூடும்.
7th Pay Commission: விரைவில் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் பம்பர் ஏற்றம்  title=

7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு, பயணப்படி, பதவி உயர்வு ஆகியவற்றுக்குப் பிறகு, இப்போது ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி காத்துக்கொண்டிருக்கின்றது. 

2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் ஏற்றம் இருக்கப்போகிறது. மத்திய மற்றும் மாநில ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்ககூடும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிப்பால், மத்திய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.8000 வரை உயரும்.

7வது ஊதியக் குழு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றி விரைவில் பரிசீலிக்கப்படலாம்

மத்திய, மாநில ஊழியர்கள் தங்களது ஃபிட்மென்ட் ஃபாக்டரை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்கு உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய ஊழியர்களின் இந்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் முடிவு ஜூலை மாதத்திற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை பரிசு கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: 6% அகவிலைப்படி உயர்வு ஜூலையில் சாத்தியம் 

அடிப்படை சம்பளம் ரூ.8000 அதிகரிக்கக்கூடும் 

மத்திய ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து முடிவு எடுக்கப்பட்டால், அவர்களின் அடிப்படை சம்பளம் நேரடியாக உயரும். பணியாளர்கள் தற்போது 2.57 ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் உதியம் பெற்று வருகின்றனர். இப்போது அதை அரசு 3.68 ஆக அதிகரிக்கலாம். இது நடந்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 8 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்படும். அதாவது ரூ.18,000 ஆக உள்ள குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000 ஆக உயரும்.

ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்காக்க பரிசீலனை 

அரசு, குறைந்தபட்ச சம்பளத்தை நேரடியாக 3.68 மடங்கு அதிகரிக்காமல், 3 மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் ஒரு பிரிவினர் நம்புகின்றனர். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, அரசாங்கம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை 3 மடங்கு அதிகரிக்கக்கூடும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3 மடங்கானால், ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.21,000 ஆக உயரும், அதாவது 3000 ரூபாய் அதிகரிக்கும்.

மத்திய அமைச்சரவை செயலாளருடன் சந்திப்பு

ஊழியர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கக்கூடும் என்று ஊழியர் சங்கம் கூறுகிறது. ஊழியர் சங்கம் ஏற்கனவே அமைச்சரவை செயலாளரை சந்தித்துள்ளது. ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு பரிசீலிக்கலாம் என்று ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு எந்த செய்தியும் இல்லை. இப்போது மீண்டும் அமைச்சரவை செயலாளருடனான கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம். இந்த சந்திப்பு ஜூலை இறுதியில் நடைபெறும் என தெரிகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் செய்தி: அகவிலைப்படியுடன் இந்த கொடுப்பனவும் உயரவுள்ளது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News