7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் வீடி கட்ட அல்லது வாங்க வங்கியிலிருந்து வாங்கிய கடனை அடைக்க வாங்கும் எஹ்பிஏ முன்பணத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2022, 07:59 PM IST
  • ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்.
  • எஹ்பிஏ முன்பணத்திற்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு title=

7வது ஊதியக் கமிஷன் / எச்பிஏ வட்டி விகிதங்கள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர்கள் வீடு கட்ட கிடைக்கும் முன்பணமான ஹவுஸ் பிள்டிங் அட்வான்ஸ் (எஹ்பிஏ), அதாவது வங்கியிலிருந்து வாங்கப்படும் கடனின் வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு ஒரு அலுவலக குறிப்பாணையும் வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.

ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம்!

இந்த முடிவின்படி, ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை, அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டுவதற்கும், வீடு வாங்குவதற்கும் வங்கியில் வாங்கிய வீட்டுக் கடனை அடைக்க வழங்கப்படும் முன்பணத்திற்கான வட்டி விகிதத்தில் 80 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.8 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது மத்திய ஊழியர்களின் சொந்த வீடு கனவு நிஜமாவது இன்னும் எளிதாகிவிடும். 31 மார்ச் 2023 வரை ஊழியர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

எந்த விகிதத்தில் முன்பணம் கிடைக்கும்? 

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த குறிப்பேட்டில் முன்பணத்தின் வட்டி விகிதங்களைக் குறைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, 2023 மார்ச் 31 வரை, பணியாளர்கள் இப்போது ஆண்டுக்கு 7.1 சதவிகித வட்டியில் முன்பணம் பெறலாம். இது முன்பு ஆண்டுக்கு 7.9 சதவிகிதமாக இருந்தது.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 

எவ்வளவு முன்பணம் வாங்க முடியும்? 

அரசாங்கத்தால் வழங்கப்படும் இந்த சிறப்பு வசதியின் கீழ், மத்திய ஊழியர்கள் இரண்டு வழிகளில் இதை செய்யலாம். அடிப்படை சம்பளத்தின் படி 34 மாதங்கள் வரை அல்லது அதிகபட்சமாக ரூ 25 லட்சம் வரை ஊழியர்கள் முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். மேலும், வீட்டின் செலவு அல்லது ஊழியர்களின் செலுத்தும் திறன் என இரண்டில் ஊழியர்களுக்கு எது குறைவாக இருக்கிறதோ, அந்தத் தொகையை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.

எச்பிஏ என்றால் என்ன?

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடு கட்ட முன்பணம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், பணியாளர் சொந்தமாகவோ அல்லது மனைவியின் மனையிலோ வீடு கட்ட முன்பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டம் 1 அக்டோபர் 2020 முதல் தொடங்கப்பட்டது. இதன் கீழ், 31 மார்ச் 2023 வரை, மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 7.1% வட்டி விகிதத்தில் வீடு கட்ட அல்லது வாங்க முன்பணத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News