பெற்ற குழந்தையை தீயில் இட்டு கொன்ற ஒரிசா தாய்!

கணவரின் மீது கொண்ட கோபத்தால், ஒரிசாவை சேர்ந்த பெண் தனது 6-மாத குழந்தையினை தீயில் இட்டு கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Apr 27, 2018, 04:26 PM IST
பெற்ற குழந்தையை தீயில் இட்டு கொன்ற ஒரிசா தாய்! title=

கணவரின் மீது கொண்ட கோபத்தால், ஒரிசாவை சேர்ந்த பெண் தனது 6-மாத குழந்தையினை தீயில் இட்டு கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

ஒரிசாவின் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் சுனா பின்குவா(32). மன்குளி பின்குவா என்வருக்கு இரண்டாவது மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார். எனினும் இதுவரை இவர்கள் இருவருக்கும் முறையாக திருமணம் நிகழவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த சுனா பின்குவா, தனது கணவரின் துணிகளை எரித்துள்ளார். பின்னர் அதே நெருப்பின் தனது 6 மாத குழந்தையினையும் இட்டு எரித்துள்ளார்.

இச்சம்பவத்தால் சுமார் 90% உடல் கருகிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக குழந்தை SCB மருத்துவ கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது.

அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், சுனா பின்குவா தனது குழந்தையினை தீயில் இட்ட பின்னர் அருகில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிவித்துள்ளனர்!

Trending News