வாய் தவறி பேசிவிட்டேன்! விளக்கம் அளித்த அமித் ஷா!

பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலானது.

Last Updated : Mar 30, 2018, 04:51 PM IST
வாய் தவறி பேசிவிட்டேன்! விளக்கம் அளித்த அமித் ஷா! title=

பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலானது.

கர்நாடக மாநிலம் தாவான் கிரியில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த அமித் ஷா, சமீபத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மிகவும் ஊழல் மலிந்த அரசுக்கான போட்டி வைத்தால் எடியூரப்பா அரசுதான் முதலிடத்தில் இருக்கும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார். அமித் ஷா இதை கூறும்போது எடியூரப்பா அவர் அருகிலேயே அமர்ந்திருந்தார். மற்றொரு தலைவர் அவர் காதுகளில் கிசுகிசுத்தவுடன் அமித் ஷா தன்னை திருத்திக்கொண்டார். 

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் மைசூரில் பேசிய அவர், இந்த சபவம் குறித்து விளக்கம் அளித்தார், அப்போது அவர், `கர்நாடகா ஊழல் விவகாரத்தில் சித்தராமையாவுக்கு பதில் எடியூரப்பா பெயரை வாய் தவறி கூறிவிட்டேன். நான் வாய் தவறி பேசியதால் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் தவறு செய்தாலும் கர்நாடக மக்கள் தேர்தலில் தவறு செய்ய மாட்டார்கள். என தெரிவித்துள்ளார்.

Trending News