Beijing Corona Alert லாக்டவுன் அச்சத்தால் பெய்ஜிங்கின் கடைகளில் காலியாகும் பொருட்கள்

கொரோனா வைரஸின் தாயகமான சீனாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் கடைகளை முற்றுகையிடுகின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 25, 2022, 09:52 PM IST
  • அதிகரிக்கும் கொரோனா பரிசோதனையால் பெய்ஜிங்கில் பீதி
  • கொரோனாவின் தாயகத்தில் அதிகரிக்கும் கோவிட் அச்சம்
  • பெய்ஜிங்கில் முழு லாக்டவுனா?
Beijing Corona Alert லாக்டவுன் அச்சத்தால் பெய்ஜிங்கின் கடைகளில் காலியாகும் பொருட்கள்  title=

கொரோனா வைரஸின் தாயகமாக கருதப்படும் சீனாவில் அண்மைக்காலமாக மீண்டும் அதன் தாக்கம் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. 

 கொரோனா வைரஸ்  அதிக அளவில் அதிகரித்து வருவதால் பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், சீனாவிற்கு சங்கடங்கள் அதிகரித்தால், அந்நாட்டு அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், குடிமக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து ஷாங்காய் நகரில் கடுமையான கட்டுப்பாடுகளும் லாக்டவுனும் அமல்படுத்தப்பட்டது. அதன் எதிரொலியாக பெய்ஜிங்கிலும் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.

பெய்ஜிங்கிலும் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் மக்கள் பெரும்திரளாக கடைகளை முற்றுகையிட்டனர்.

ஷாப்பிங் மால்களிலும், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சீனாவின் (China) பெய்ஜிங்கில் கோவிட் வெகுஜன சோதனை தொடங்கப்பட்டதால், லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளால் மக்கள் கடைகளுக்கு விரைந்து தேவையான உணவுப்பொருட்களை வாங்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்

பெய்ஜிங்கின் மிகப்பெரிய மாவட்டமான சாயோயாங்கில், ஒரு வாரத்தில் 3.5 மில்லியன் குடிமக்கள் மூன்று COVID-19 சோதனைகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இவ்வளவு கடுமையாக கோவிட் சோதனை செய்யும் முதல் இடமாக சாயோயாங் மாறியது. வெள்ளிக்கிழமை முதல் பெய்ஜிங்கின் அறிகுறியற்ற வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

"பெய்ஜிங்கில் தற்போதைய வெடிப்பு இன்னும் அறியப்படாத மூலங்களிலிருந்து திருட்டுத்தனமாக பரவுகிறது மற்றும் வேகமாக வளர்ந்து வருகிறது" என்று சாயோயாங் நகராட்சி அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (2022, ஏப்ரல் 24) தெரிவித்தார்.

சுமார் 12-14 குடியிருப்பு கட்டிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டதால், கோவிட்-19 அதிகரித்த பிறகு சாயோங்கில் ஒரு பகுதியில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.  

"முக்கியமான தொற்றுநோய் நடவடிக்கைகளை எடுப்பதற்காக காத்திருக்க முடியாது ... பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து ஆபத்தில் உள்ள தளங்கள் மற்றும் தனிநபர்களை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிய வந்த நாளன்றே சரிபார்க்கப்பட வேண்டும்," என்று சாயோயாங் நகராட்சி அதிகாரி தெரிவித்தார். 

 உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படும் நிலைமை மீண்டும் நிகழும் என்று அஞ்சுவதால், உடனடியாக லாக்டவுனை அமல்படுத்த விரும்பவில்லை என்று ஷாங்காய் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

பல பல்பொருள் அங்காடிகள், மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் விதத்தில், தங்கள் வேலை நேரத்தை அதிகரித்துள்ளன.

சீனாவில் நிலைமை மோசமடைந்து வருவது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவிட் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் நிலைமை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது

மேலும் படிக்க | மீண்டும் எகிறும் கொரோனா எண்ணிக்கை, பாசிடிவ் விகிதம் 5% தாண்டியது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News