வடகொரியாவுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!!

Last Updated : Oct 8, 2017, 11:33 AM IST
வடகொரியாவுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை!! title=

எவ்வளவு முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனற்று போய்விட்டது, ஒன்றேயொன்றுதான் இனி சரிப்பட்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியாவுக்கு எச்சரித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள டிவீட்:- ''அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருகின்றனர்.

உடன்படிக்கைகள் மேற்கொண்டனர், பெரிய தொகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லம் ஒன்றும் வேலைக்கே ஆகவில்லை, ஒப்பந்தங்கள் அதன் மை காயும் முன்பே மீறப்படுகின்றன. அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்களை முட்டாளாக்குகின்றனர். எனவே மன்னிக்கவும், வடகொரியாவுக்கு எதிராக ஒரேயொரு விஷயம்தான் சரிப்பட்டு வரும்'' என்றார்.

Trending News