தைவானில் இந்து கோவில்... வலுவாகும் இந்தியா தைவான் கலாசார உறவுகள்!

தைவான் தலைநகர் தைபேயில் முதல் இந்து கோவில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக தைபேயில் வசிக்கும் இந்து வணிகர் ஒருவரால் இந்த ஆலயம் திறக்கப்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 27, 2023, 04:56 PM IST
  • தைவானில் உள்ள ஒரே ஒரு இந்து கோவிலுக்கு 'சப்கா மந்திர்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • பிரபல இந்திய உணவகத்தின் உரிமையாளர் ஆண்டி சிங் ஆர்யா ஆலயத்தை கட்டியுள்ளார்
  • தைவானில் வசிக்கும் இந்தியக் குடிமகன் சனா ஹாஷ்மியும் கோயிலைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தைவானில் இந்து கோவில்... வலுவாகும் இந்தியா தைவான் கலாசார உறவுகள்! title=

தைபே: தைவானில் உள்ள இந்துக் கோவிலில், இந்தச் செய்தியைக் கேட்டால் நீங்கள் சற்று ஆச்சர்யப்பட்டாலும் உண்மைதான். தைவான் தலைநகர் தைபேயில் இந்து கோவில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. தைவானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இந்த கோயில் கூறப்படுகிறது. தைவானில் உள்ள இந்த ஒரே ஒரு இந்து கோவிலுக்கு 'சப்கா மந்திர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மக்கள்-மக்கள் உறவில் இது ஒரு முக்கியமான மைல்கல். இரண்டு தசாப்தங்களாக தைவானில் குடியேறியவரும், பிரபல இந்திய உணவகத்தின் உரிமையாளருமான ஆண்டி சிங் ஆர்யாவுக்கு இந்த சாதனைக்கான பெருமை வழங்கப்படுகிறது.

தைவான் மக்களும் கோயிலுக்கு வருகை தந்தனர்

தைவானில் வசிக்கும் இந்திய குடிமகன் சனா ஹாஷ்மி, கோவில் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள இந்திய சமூகத்துடன் நல்லுறவை மேம்படுத்துவதில் தைவானின் ஆழ்ந்த அர்ப்பணிப்பை இந்தக் கோவிலின் ஸ்தாபனம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றார். இந்தியா-தைவான் உறவுகளின் கலாச்சாரக் கதையில் கோயில் திறப்பு ஒரு வரலாற்று தருணம். தைவானில் உள்ள ஐஐடி-இந்தியன்ஸ் நிறுவனர் டாக்டர் பிரியா லால்வானி பர்ஸ்வேனி, இந்தக் கோயிலைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியுடன் கருத்தைத் தெரிவித்துள்ளார். தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமின்றி, தைவான் குடிமக்களுக்கும் இது முக்கியமானது என்றார். தைவான் நாட்டு மக்களும் இதன் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதை இந்தக் கோயில் காட்டுகிறது என்றார்.

மேலும் படிக்க |  Chandrayaan 3: நிலவில் பிரக்யான் ரோவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீடியோவை பகிர்ந்த இஸ்ரோ!

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல்

இந்தியா-தைவான் கலாச்சார உறவுகளில் இது ஒரு வரலாற்று தருணம் என்று அவர் கூறினார். தைவானில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி, தைவான் நண்பர்களும் இதன் தேவையை புரிந்துகொள்கிறார்கள். இந்த கோவில் மங்களகரமானதாக நிரூபித்து தைவானுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும் என்று தைவான் மக்கள் நம்புகின்றனர். இராஜதந்திர முயற்சிகளை விரிவுபடுத்தும் பின்னணியில் கோயிலின் திறப்பு விழா நடைபெறுகிறது. மும்பையில் தைபே பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையத்தை அமைக்கும் திட்டத்தை தைவான் சமீபத்தில் வெளியிட்டது. இந்த மையத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.

தைவானில் உள்ள இஸ்கான் கோவில் 

தைவானில் உள்ள இஸ்கான் கோவில் ஆன்மீக அடையாளமாக மட்டுமல்லாமல், தைவானுக்கும் இந்தியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது. இந்தியா மற்றும் தைவான் இடையே இருதரப்பு வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் $1.5 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளுடன் இருதரப்பு வர்த்தக உறவுகள் புதிய உயரங்களை எட்ட உள்ளன. தைவானில் இந்திய சமூகம் கூடும் முதல் கோவிலாக 'சப்கா மந்திர்' நம்பப்படுகிறது. ஏற்கனவே ஒரு 'இஸ்கான் கோவில்' மற்றும் ஒரு விநாயகர் கோவில் இருந்த போதிலும், இது தாய்லாந்து மக்களிடையே மிகவும் பிரபலமாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | சந்திரயான் 3 நிலவில் என்ன செய்யப்போகிறது? அடுத்தகட்டம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News