இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு- 15 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

Last Updated : Apr 27, 2019, 09:34 AM IST
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு- 15 பேர் உயிரிழப்பு title=

இலங்கையில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கையின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவப்படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கல்முனை  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடிப்படையினர் வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையின்போது வீட்டினுள் திடீரென குண்டு வெடித்து சிதறியது. குண்டுவெடித்ததில் வீட்டிற்குள் இருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். 

Trending News