பாரிஸ் தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி; ஐ.எஸ் பொறுப்பேற்பு

Last Updated : Apr 21, 2017, 10:33 AM IST
பாரிஸ் தாக்குதல்: போலீஸ் அதிகாரி பலி; ஐ.எஸ் பொறுப்பேற்பு title=

பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சாம்ப்ஸ் எலிஸில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் போலீஸ் அதிகாரிகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை.ஆனால், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளான தயே பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News