பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி

Last Updated : Mar 31, 2017, 03:35 PM IST
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலி title=

வடமேற்கு பாகிஸ்தானில் நடத்த தற்கொலைப்படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் மேற்கு பழங்குடி பிராந்தியத்தில் மக்கள் அதிகம் கூடும் சந்தைப் பகுதியில் நுழைந்த தீவிரவாதி தனது உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.

இந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த தற்கொலைப் படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் நவாஷ் ஷெரீப் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Trending News