ரஷ்யா: அலெக்சி நவாலினியின் உடலில் காயங்கள் - இது கொலை என உறவினர்கள் புகார்

ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்த அலெக்சி நவால்னியின் உடம்பில் படுகாயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 19, 2024, 08:29 PM IST
  • அலெக்சி நவால்னி இறப்பில் மர்மம்
  • உடலில் காயங்கள் இருப்பதாக புகார்
  • செய்தித்தாள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ரஷ்யா: அலெக்சி நவாலினியின் உடலில் காயங்கள் - இது கொலை என உறவினர்கள் புகார் title=

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி அண்மையில் மரணமடைந்தாக செய்தி வெளியானது. ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்து வந்த அவர் சிறையில் இருக்கும்போது திடீரென மரணமடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இப்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 

அலெக்சி நவால்னி இறந்த 2 நாட்களுக்குப் பிறகு ஆர்ட்டிக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரது உடல் இருப்பதை அந்நாட்டு செய்தித்தாள் தெரிவித்தது. மேலும், அந்த செய்தியில் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் இடம்பெற்றுள்ளன. நவாலினியின் உடலில் தலையில் மற்றும் மார்பில் காயங்கள் இருப்பதாக, பெயர் குறிப்பிடப்படாத ஒரு மருத்துவ ஊழியர் தெரிவித்ததாக அந்த செய்தித்தாள் கூறியுள்ளது. சாதாரணமாக சிறையில் இறப்பவர்களின் உடல்கள் நேரடியாக நீதி மருத்துவ பரிசோதனை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும். ஆனால் நவாலினியின் உடல் "ஏதோ ஒரு காரணத்தால்" ஒரு கிளினிக்கல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று அந்த செய்திதாள் கூறியுள்ளது. 

மேலும் படிக்க | Hunza: 150 வயசு இருக்கறதெல்லாம் பெரிய விஷயமா என்ன? அசால்டாய் சொல்லும் ஹன்சா சமூகத்தினர்!

மேலும், அவருடைய உடலில் காயங்கள் இருந்ததாகவும் செய்திதாள் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இதுவரை அவரது உடலை குடும்ப உறுப்பினர்கள் பார்க்கவில்லை. நவாலினியின் உடலை மூன்றாம் நாளாக அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நவால்னி வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நவால்னி செய்தித் தொடர்பாளர் கிரா யார்மிஷ், "அலெக்சியின் தாயார் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் காலை வேளையில் மோர்க்குக்கு வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. வழக்கறிஞர்களில் ஒருவர் வெளியே தள்ளப்பட்டார். 

அலெக்சியின் உடல் அங்குதான் இருக்கிறதா என்று ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் பதில் அளிக்கவில்லை" என்று X இல் பதிவிட்டார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முக்கிய அரசியல் எதிரியாக இருந்தவர் அலெக்சி நவாலினி. ரஷ்யாவின் கடுமையான சிறைச்சாலைகளில் ஒன்றான ரஷ்யாவின் தொலைதூர வடக்கில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட நவால்னி அங்கு 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்தார். 30 ஆண்டுகள் தண்டனையில் வெறும் மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்த நிலையில் இப்போது இறந்துவிட்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக அமெரிக்காவும் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு புடின் தான் காரணம் என்றும் விமர்சித்துள்ளது. 

மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News