பள்ளி மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த ஐ.எஸ்.

Last Updated : Jun 21, 2017, 01:09 PM IST
பள்ளி மாணவர்களை பிணைக் கைதிகளாக சிறைபிடித்த ஐ.எஸ். title=

பிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளி மாணவர்களை பணையக்கைதிகளாக சிறை பிடித்து ஐ.எஸ் பயங்கரவாதிகள்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மார்வாய் நகரத்தில் ஐ.எஸ் ஆதரவு பயங்கரவாதிகள், பிலிப்பைன்ஸ் இராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிக்காவயன் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் இராணுவ பள்ளிக்கூடம் ஒன்றில், புகுந்த 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை சிறை பிடித்துள்ளனர். அவர்கள் ஐஎஸ் ஆதரவு பெற்ற பி.ஐ.எஃப்.எஃப். பயங்கரவாதிகள் என பிலிப்பைன்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர். 

பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியை அந்நாட்டு இராணுவம் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. எத்தனை பேர் பணையக்கைதிகளாக பிடிபட்டுள்ளனர் என்பது குறித்தும் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

Trending News