காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: 27 பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். 

Last Updated : Nov 21, 2016, 04:13 PM IST
காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு: 27 பலி title=

காபூல் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த வெடி குண்டு தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள ஷியா மசூதியில் இன்று பகல் 12.30 மணியளவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது காபூலில் இன்று நடைபெறும் இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும். 

இந்த தாக்குதலில் 27-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகவும், சுமார் 50 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு துவக்கத்தில் மசூதி ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பெற்றது. இன்று நடைபெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

Trending News