ஆப்கானிஸ்தான் எம்.பி வீட்டில் தாக்குதல்; 8 பேர் பலி

Last Updated : Dec 22, 2016, 03:08 PM IST
ஆப்கானிஸ்தான் எம்.பி வீட்டில் தாக்குதல்; 8 பேர் பலி title=

ஆப்கானிஸ்தானின் பாராளுமன்ற தொகுதி எம்.பியான மிர் வாலியின் வீட்டில் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஹேல்மண்ட் பாராளுமன்ற தொகுதி எம்.பியான மிர் வாலியின் வீடு உள்ளது. நேற்று மாலை தலீபான் பயங்கரவாதிகள் இவரது வீட்டில் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பாதுகாப்பு அதிகாரிகளின் முக்கியமான கூட்டத்தை சீர்குலைக்க  தங்கள் இயக்கத்தின் தற்கொலைப்படையினர் எம்.பியின் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக தலீபான் பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நடைபெறும் போது எம்.பி மிர் வாலி வீட்டில் இருந்தாரா? இல்லையா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. 

ஆனால், எம்.பியின் உறவினர்கள் சிலர் கொல்லப்பட்டதாகவும் சிலர் பணையக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. துப்பாக்கிச்சூடும் வெடிகுண்டு சத்தமும் கேட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். 

Trending News