இந்த ஆண்டு இறுதியில் முதல் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. இதில் நியூசிலாந்திற்கு எதிராக விளையாட தகுதிபெற வேண்டுமானால், இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற வேண்டியது மிக முக்கியமாகும்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1 -1 என்று சமன் செய்துள்ளது. இந்திய அணியில் எல்லா வீரர்களும் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவி உள்ளனர். முக்கியமாக இந்திய அணியின் வெற்றிக்கு இன்று அஸ்வின் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் மொட்டெரா ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் 50 சதவீத பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜி.சி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாக அமைக்கப்பட்ட கரும் பச்சை சேப்பாக்கம் மைதானம், கொரோனா தாக்கத்திற்கு பிறகு சென்னை ரசிகர்கள் எழுப்பும் உற்சாகக் குரலை இன்று காலை முதல் கேட்கும். இது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று சொல்லலாம்.
ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று உற்சாகத்தின் உச்சியில் இருந்த இந்திய அணி, இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்டில் 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் விளையாடிய 17 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண் அவருக்கு எப்போதுமே நல்ல அனுபவத்தை தருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார்.
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டொமினிக் சிபிலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.
சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் லாக்டௌன் விதிமுறைகளை சற்று தளர்த்தியுள்ளன. இதன் காரணமாக சென்னையின் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அஸ்வினின் பந்துவீச்சின் தாக்கம் கண்டிப்பாக பெரிதாக இருக்கும் என்றார் அவர். இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு பொறுமை முக்கியமான அம்சமாக இருக்கும் என்றார் மார்க் பவுட்சர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.