முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவினர் அணையை ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய சந்தேகம் எழுவதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் பதிலளிப்பாரா எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடைக்கான மசோதா விவகாரத்தில் அனைத்து பழியையும் ஆளுநர் மேல் போட்டு திமுக அரசு தப்பிக்க முடியாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியின் இலக்கிய செழுமையை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்று அறிவுசார் சமூகத்தை வார்த்தெடுக்கும் இலக்குடன் இலக்கிய திருவிழாக்கள் நடத்தபடுவதாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
10 விழுக்காடு EWS இடஒதுக்கீட்டுக்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது சீராய்வு மனுவை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் வரும் நவ. 12ஆம் தேதி நடைபெறுகிறது.
சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு எனவும், ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டுமென்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.