மோசமான ஓட்டுநர்கள் தரவரிசை... இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா - ஜப்பான் தான் பெஸ்ட்!

தனியார் காப்பீடு நிறுவனம், உலகின் சிறந்த ஓட்டுநர்கள் மற்றும் உலகின் மோசமான ஓட்டுநர்களை கொண்ட நாடுகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Feb 24, 2023, 11:31 AM IST
  • தென்கிழக்கு ஆசியா நாடுகள் சிறந்த ஓட்டுநர்கள் பட்டியலின் அதளபாதளத்தில் உள்ளனர்.
  • ஜப்பான் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
  • இந்தியா மோசமான ஓட்டுநர்கள் தரவரிசையில் உள்ளது.
மோசமான ஓட்டுநர்கள் தரவரிசை... இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா - ஜப்பான் தான் பெஸ்ட்! title=

உலகெங்கிலும் உள்ள நாடுகளின் வாகனம் ஓட்டும் பழக்கத்தை ஒப்பிடும் சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது. மேலும், உலகின் சிறந்த ஓட்டுநர் நெறிமுறைகளை கடைபிடிக்கும் நாடாக ஜப்பான் உள்ளது. அங்கு அதிகமானோர் சிறந்த ஓட்டுநர்களாக உள்ளனர்.

அதேசமயம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகள் தரவரிசையின் அதளபாதாளத்தில் உள்ளன. Compare the Market என்ற காப்பீட்டு நிறுவனத்தால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆய்வு, 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்களைப் பகுப்பாய்வு செய்து, போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் போக்குவரத்துக் கவனங்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் சிறந்த மற்றும் மோசமான ஓட்டுநர்களின் பட்டியலைத் தொகுத்தது. நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகள், சாலை நிலைமைகள் மற்றும் ரத்தத்தில் உள்ள மதுபான அளவுகள் போன்ற புறநிலை காரணிகளையும் ஆய்வு கருத்திற்கொண்டது. 

இந்த ஆய்வின்படி, மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்திலும், பெரு மற்றும் லெபனான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. உலகின் சிறந்த ஓட்டுநர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜப்பான் 4.57 புள்ளிகளைப் பெற்ற நிலையில், இந்தியா 2.34 மதிப்பெண்களை மட்டுமே பெற்றது. உலகின் சிறந்த ஓட்டுநர்களைக் கொண்ட பட்டியலில், நெதர்லாந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து நார்வே, எஸ்டோனியா மற்றும் ஸ்வீடன் உள்ளன.

மேலும் படிக்க | பிரதமர் மோடி நல்லவர்! அவர் பாகிஸ்தானை ஆள வேண்டும்: கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்

இந்தியாவில் சமீப வருடங்களில் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை ஏற்படுத்தும் வகையில், அவசரமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலையில் அதிவேகமாக ஓட்டுதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடுமையான போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்துவது, போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இருப்பினும், ஓட்டுநர் கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவது, சாலை உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது ஆகியவை இந்தியாவில் விபத்துகளைக் குறைப்பதற்கும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் முக்கியமான படிகள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளை உறுதிப்படுத்துவது மற்றும் விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பது ஆகியவை அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் முதன்மையான முன்னுரிமையாகும். 

ஆய்வின் தரவரிசைகள் அகநிலையாக இருந்தாலும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், இந்தியாவிலும் உலகெங்கிலும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் சம்பவங்களைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் அவசியத்தை அவை எடுத்துக்காட்டுகின்றன.

மேலும் படிக்க | Kohinoor Diamond: இங்கிலாந்து ராஜ மகுடத்தில் இனி கோஹினூர் வைரத்துக்கு இடமில்லை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News