Airtel ரீச்சார்ஜ் கட்டணங்கள் எல்லாம் உயரப்போகுது....! புத்தாண்டுக்கு முன் ஷாக் கொடுக்கும் ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் ரீச்சார்ஜ் கட்டணங்கள் எல்லாம் அடுத்த ஆண்டில் படிப்படியாக உயரும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 24, 2023, 03:25 PM IST
  • புத்தாண்டுக்கு முன் அதிர்ச்சி கொடுத்த ஏர்டெல்
  • அடுத்த ஆண்டில் உயரும் ப்ரீப்பெய்ட் பிளான்கள் விலை
  • படிப்படியாக உயரத்தப்படும் என கோபால் விட்டல் தகவல்
Airtel ரீச்சார்ஜ் கட்டணங்கள் எல்லாம் உயரப்போகுது....! புத்தாண்டுக்கு முன் ஷாக் கொடுக்கும் ஏர்டெல் title=

புத்தாண்டு தொடங்க இருப்பதால் ஜியோ, ஏர்டெல் போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர்களை அள்ளி வழங்குவார்கள் என எதிர்பார்த்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது ப்ரீப்பெய்ட் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலைகள் படிப்படியாக அடுத்த ஆண்டில் உயர இருப்பதாக Airtel நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் அளித்த பேட்டிக்கு பிறகு Airtel நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க | இந்தாண்டில் ஆதிக்கம் செலுத்திய மொபைல்கள்... அதுவும் ரூ.15 ஆயிரம் குறைவான விலையில்!

இருப்பினும், இந்த விலை உயர்வு என்பது படிப்படியானதாக இருக்கும் என்றும், இரண்டு முறைக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்வு செய்யப்படலாம் என்றும் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார். மக்கள் விலை உயர்வு குறித்து அதிருப்தி அடையாத வகையில் படிப்படியாக விலை உயர்வை அமலுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது ஏர்டெல் நிறுவனம். Airtel நிறுவனம் ஏற்கனவே ரூ.200 ஏஆர்பியூ இலக்கை எட்டியுள்ளது. இதன் அடுத்த இலக்கு ரூ.300 ஆகும். இந்த இலக்கை எட்டுவதற்கு இரண்டு அல்லது மூன்று முறை விலை உயர்வு தேவைப்படும் என்று கோபால் விட்டல் தெரிவித்திருக்கிறார்.

Airtel நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துவதற்கான காரணம், அதன் வருவாய் மற்றும் விளிம்புகள் மீது அதிகரித்து வரும் அழுத்தம் ஆகும். டெலிகாம் துறையில் போட்டி அதிகரித்து வருவதால், Airtel நிறுவனம் தனது வருவாய் மற்றும் விளிம்புகளை அதிகரிக்க வழி தேடி வருகிறது. Airtel நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியால், அது பயனர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஏற்கனவே, மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், ரீசார்ஜ் கட்டணங்களும் உயர்த்தப்பட்டால், மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும்.

Airtel நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தாமல், வேறு வழிகள் மூலம் தனது வருவாய் மற்றும் விளிம்புகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, ஃபீச்சர் போன் பயனர்களை ஸ்மார்ட்போன் பயனர்களாக்குவது, ப்ரீபெய்ட் பயனர்களை போஸ்ட்பெய்டுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை எடுக்கலாம். Airtel நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்தால், அது பயனர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால், அதை மிகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Year Ender 2023: புயலை கிளப்பிய 5ஜி ஸ்மார்ட்போன்கள்... இந்தாண்டின் நாலு நச் மொபைல்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News