Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை தொடரும்

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 02:32 PM IST
  • அதிகபட்ச வெப்பநிலை 36, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
  • சென்னை நந்தனத்தில் 7 சென்டி மீட்டர் மழை
  • நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
Weather Update: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை தொடரும் title=

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஜூன் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழகம் (Tamil Nadu Rain Update), புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை (Thunderstorm light rains) பெய்யக்கூடும்.

ALSO READ | TN Weather Update: ராமேஸ்வரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை

அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அளவாக சென்னை நந்தனத்தில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் , திருவாலங்காடு, சோளிங்கர் , வேலூர் ஆகிய இடங்களில் தலா 3 சென்டி மீட்டர் மழையும், கோத்தகிரி ஆகிய இடங்களில் இரண்டு சென்டி மீட்டர் மழையும், சென்னை நுங்கம்பாக்கம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும், அதேபோல அண்ணா பல்கலைக்கழகம், பூந்தமல்லி, சென்னை விமான நிலையம், கலவை, சாய்ராம் கல்லூரி மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ALSO READ | இந்தியாவில் 1983-க்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் அதிகப்படியான மழை பதிவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News