தமிழகம் வந்தடைந்தார் பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

Last Updated : Sep 19, 2017, 03:02 PM IST
 தமிழகம் வந்தடைந்தார் பொருப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்! title=

பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் மும்பை சென்ற தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்று கொண்டதை தொடர்ந்து அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் அவர் மும்பை கிளம்பி சென்றார். 

இந்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்தடைந்தார்.

Trending News