திபாவளிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிப்பு!!

Last Updated : Oct 15, 2017, 10:40 AM IST
திபாவளிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிப்பு!! title=

தீபாவளிக்காக சென்னையில் இருந்து தென்மாவட்டத்திற்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்டுக்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. 

இந்த நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கிளம்பும். இதே போல் தீபாவளி தினத்தை கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இதே ரயில் திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு வரும் வெள்ளிக்கிழமை காலை 7.20 மணிக்கு இயக்கப்படும். இந்த ரயிலிலும் முன்பதிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending News