சென்னைக்கு நீரை கொண்டு வர ஆகும் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்: தெற்கு ரயில்வே

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2019, 06:24 PM IST
சென்னைக்கு நீரை கொண்டு வர ஆகும் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும்: தெற்கு ரயில்வே title=

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வர ஆகும் செலவுகளை தமிழக அரசு ஏற்க வேண்டும் என தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் உணவகங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழக அரசு பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதற்காக தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்நிலையில் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. 

ஆனால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நீரை கொண்டு வர ஆகும் செலவுகளை தமிழக அரசே செலுத்த வேண்டும் என்றுக் கூறிய, கட்டண விவரங்களை நிபந்தனைகளுடன் சென்னை குடிநீர் வாரியத்துக்கு ரயில்வே கடிதம் அனுப்பியுள்ளது.

Trending News