பல மாவட்டங்களில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை; பல இடங்களில் நீர் தேக்கம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2019, 08:37 AM IST
பல மாவட்டங்களில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை; பல இடங்களில் நீர் தேக்கம் title=

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதியில் மழை பெய்ததால், வெயிலில் தவித்த சென்னைவாசிகளுக்கு சிறிது இதமான சூழல் கிடைத்தது. 

உளுந்தூர்பேட்டை, திருவெண்னைநல்லூர், சங்கராபுரம், காணை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்தது. தொடர்ந்து 4-வது நாளாக மழை பெய்ததால், வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த மழையின் காரணமாக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Trending News