சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமறைவான காவலர் முத்துராஜ் கைது; தொடரும் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட காவலர் முத்துராஜ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 4, 2020, 08:00 AM IST
  • இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர் முத்துராஜ் தலைமறைவானார்.
  • காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவிப்பு.
  • காவலர் முத்துராஜ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
  • காவலர் முத்துராஜ் மீதும் கொலை வழக்கு பதிவு.
சாத்தான்குளம் கொலை வழக்கில் தலைமறைவான காவலர் முத்துராஜ் கைது; தொடரும் விசாரணை title=

தூத்துக்குடி: சாத்தான்குளம் (Sathankulam) தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட காவலர் முத்துராஜ் நேற்றிரவு தனது சொந்த ஊரான அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக, நேற்று காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக சி.பி.சி.ஐ.டி (CB-CID) போலீசார் அறிவித்தனர். 

சாத்தான்குளம் கொலை வழக்கில் ஏற்கனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், 2 எஸ்.ஐக்கள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள் | சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு

நேற்று முன்தினம் சாத்தான்குளம் (Sathankulam) தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் (Sathankulam) அருகே உள்ள பெண் காவலர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  தூத்துக்குடி தூத்துக்குடி எஸ்.பி. முருகன், "மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாங்கள் அவருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். CB-CID இந்த வழக்கை விசாரித்து வருகிறது மற்றும் குற்றவாளிகள் நீதியின் பார்வைக்கு முன் கொண்டு வரப்படுவார்கள். அதன் அடிப்படையில் சாத்தான்குளம் (Sathankulam) வழக்கில் நேரில் கண்ட சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

பிற செய்திகள் | சாத்தான்குளம் வழக்கு: சாட்சியாக இருக்கும் பெண் காவலருக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஜே பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை என்ற பெயரில். கொடூரமாக தாக்கியதால், அவர்கள் போலீஸ் காவலில் இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

Trending News