பசுமை வழிச் சாலை எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம் தீவிரம்!

சேலம் -சென்னை இடையே பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தீவிரமாக போராடி வருகின்றது!  

Last Updated : Jun 21, 2018, 07:33 AM IST
பசுமை வழிச் சாலை எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம் தீவிரம்! title=

தமிழக சட்டபேரவையில் முதல்வர் பழனிசாமி பசுமை வழிச்சாலை நிச்சயம் வந்தே தீரும் என்று உறுதி தெரிவித்ததையடுத்து, சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. 

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் பசுமை விரைவு சாலை அமைப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. பசுமை விரைவு சாலை அமைத்தால் சுமார் 66 கிலோ மீட்டர் தூரம் குறைகிறது. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் ஆகும். ஆனால், இந்த சாலை அமைந்தால் தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். பயண நேரமும் 3 மணி நேரமாக குறையும். 

இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது. 

இந்நிலையில், விளை நிலங்கள், வனப்பகுதிகள் அழிக்கப்படுவதாக கூறி இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சாலைக்காக பல கோடி மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பசுமை வழிச் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. . இதனால், சேலம், தர்மபுரியில் இதுவரை நடந்து வந்த போராட்டம் தற்போது திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Trending News