தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது: அமைச்சர் முத்துசாமி

உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஆரம்பம் முதலே நல்ல பணிகளை செய்து வருகிறார். என்றும் மேலும் அவர் எல்லா மூத்த தலைவர்களுடனும் பணிபுரிந்துள்ளார், அமைச்சராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 13, 2022, 04:10 PM IST
  • உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக சிறப்பாக செயல்படுவார்.
  • தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது.
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி.
தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது: அமைச்சர் முத்துசாமி title=

சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையில் 30% முதல் 40% காலியிடங்கள் உள்ளன, எனவே நாங்கள் பதவியை நிரப்ப முயற்சிக்கிறோம் என்றும் அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பல பணிகள் தாமதமாகி வருகிறது, அதனைத் தொடர்ந்து இன்று 25 பணியாளர்கள் புதிதாக நியமித்து உள்ளதாகவும் அவர்கள் 4 மாதம் காலம் டெல்லி, குஜராத் போன்ற இடங்களுக்கு சென்று பயிற்சியினை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும் படிக்க | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

நமக்கு மொத்தம் 48 ஏடிகள் தேவை ஆனால் 17 பேர் மட்டுமே முன்பு பணிபுரிந்தனர் அதனால் இன்று 25 பேரை நியமித்துள்ளோம் எனவே வேலை தாமதமின்றி வேகமாக நடக்கும் என்றார்.

வண்டலூர் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் பற்றிய கேள்விக்கு, புதிய பேருந்து முனையப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன, பொங்கல் பண்டிகைக்குள் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக்கூடாது, அதுவே எங்கள் நோக்கம், அதற்கான பணிகளை செய்து வருகிறோம். கோயம்பேடு காய்கறி கழிவுகளை மறு சுழற்சியில் ஈடுபடுத்துவதற்கான கேள்விக்கு, அதனை ஒரு வாரத்திற்கு பின்னர் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.

உதயநிதி ஸ்டாலின் பற்றி பேசுகையில், அரசியலில் ஆரம்பம் முதலே நல்ல பணிகளை செய்து வருகிறார். அவர் எல்லா மூத்த தலைவர்களுடனும் பணிபுரிந்துள்ளார், என்றும் அவர் அமைச்சராக சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

மேலும் படிக்க | வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை கொடுக்கவில்லை! ஏமாறவேண்டாம்: எச்சரிக்கும் அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News