உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக புதிய வழக்கு!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Dec 4, 2019, 12:07 PM IST
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக புதிய வழக்கு! title=

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 6-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் திமுக தரப்பில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வார்டு மறுவரையறை முழுமையாக நிறைவடையும் வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளது.

Trending News