நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு காலம் நீட்டிப்பு!

நெல் கொள்முதல் நிலையங்களை வரும் 30-ஆம் நாள் வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2018, 04:12 PM IST
நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு காலம் நீட்டிப்பு! title=

நெல் கொள்முதல் நிலையங்களை வரும் 30-ஆம் நாள் வரை திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது!

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது... 

"பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரீஃப் பருவத்திற்கான நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது.

இந்நிலையில், செப்டம்பர் மாதத்திலும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதியதன் பேரில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்கும் தேதியை வரும் 30-ஆம் தேதிவரை நீட்டித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது!

Trending News