TNCA தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது!

செப்டம்பர் 28-ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி தமிழக கிரிக்கெட் சங்கம் (TNCA) தனது தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

Last Updated : Sep 20, 2019, 01:40 PM IST
TNCA தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது! title=

செப்டம்பர் 28-ஆம் தேதி திட்டமிடப்பட்டபடி தமிழக கிரிக்கெட் சங்கம் (TNCA) தனது தேர்தலை முன்னெடுக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது.

முன்னதாக, தமிழக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஸ்ரீநிவாசன் உள்பட பலர் மீது சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழு (CoA) உச்ச நீதிமன்றத்தில் TNCA அலுவலக பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான தேர்தல் நடைபெற முடியாது, ஏனெனில் மாநில சங்கம் BCCI-க்கான அரசியலமைப்பை முழுமையாக பின்பற்றவில்லை என தெரிவித்திருந்தது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம் TNCA-க்கு திட்டமிட்டபடி தேர்தலை முன்னெடுக்க ஒரு அனுமதி அளித்தது. என்றபோதிலும், தேர்தல் முடிவுகள் நீதிமன்ற நடவடிக்கைகளின் இறுதி முடிவுக்கு உட்பட்டது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், BCCI அரசியலமைப்பை முடிந்தவரை பின்பற்றுமாறும் உச்சநீதிமன்றம் மாநில சங்கத்தை மேலும் கேட்டுக்கொண்டது. தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்கம் அலுவலக பொறுப்பாளர் பதவிகளுக்கு மட்டுப்படுத்தப்படும், ஆனால் தரவரிசையில் பட்சம் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இந்த வார தொடக்கத்தில், தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆராய TNCA தனது சொந்த குழுவை நியமித்தது. இதற்கிடையில், BCCI-யின் ஊழல் தடுப்பு பிரிவு ஏற்கனவே இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியது.

லீக்கின் போது தெரியாத ஒருவர் சில கிரிக்கெட் வீரர்களை அணுகியதாகவும், வீரர்கள் அதை ACU-வின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Trending News