சென்னையில் 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின!!

Last Updated : May 18, 2017, 12:46 PM IST
சென்னையில் 45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின!! title=

சென்னை கோடம்பாக்கத்தில் ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தண்டபாணி என்பவர் காவலர் சீருடை விற்படை செய்யும் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசார் துணையுடன் இங்கு சோதனை நடத்தினர். அப்போது  ரூ.45 கோடிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரின் வீட்டில் இருந்து இந்த பணத்தை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுக் கட்டாக கைப்பற்றப்பட்ட ரூ. 45 கோடியை 3 வாகனங்களில் போலீசார் எடுத்து சென்றனர். மேலும் அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

Trending News