மக்களே உஷார்: ரேஷனில் நடக்கும் முறைகேடுக்கு முற்றுப்புள்ளி!

ரேஷனில் பொருட்கள் வாங்காமலேயே குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் வந்தால் 9980904040 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது.

Last Updated : Feb 11, 2018, 02:47 PM IST
மக்களே உஷார்: ரேஷனில் நடக்கும் முறைகேடுக்கு முற்றுப்புள்ளி! title=

தமிழகத்தில் ஒரு கோடியே 94 லட்சம் குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்கள் ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டிற்காக ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், சில பகுதிகளில் பொருட்கள் வாங்காத நிலையில் வாங்கியதாக குறுஞ்செய்தி வருவதாகக் குடும்ப அட்டைதாரர்கள் புகார் கூறினர். 

அது தொடர்பாக 9980904040 ஆகிய எண்ணிற்கு புகார் அனுப்பலாம் என்றும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுத்துறை தெரிவித்துள்ளது. வாங்காத பொருளை வாங்கியதாகக் குறுஞ்செய்தி வந்தால், அதை இந்த தொலைபேசி எண்ணுக்கு ஃபார்வேர்ட் செய்து புகாரை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending News