திமுக ஆட்சியை மக்கள் விரும்ப வில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்!

திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 11, 2019, 10:03 AM IST
  • தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை.
  • நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது போல் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது.
  • அயோத்தி விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்சம் தொட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
திமுக ஆட்சியை மக்கள் விரும்ப வில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்! title=

திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கோவி.சந்துரு தலைமையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிரு‌‌ஷ்ணன் முன்னிலையில் பாஜக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
 
இந்த நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., 

பாஜக-வின் கொள்கைகளாலும், செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் பாஜக-வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை. தமிழகம் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எந்த கட்சியும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்காது. ஆனால் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மத்திய அரசு மட்டும் நினைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தது போல் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஏனென்றால் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மக்கள் செல்வாக்கு பெற்ற மிகப்பெரிய 2 ஆளுமைகள் இப்போது நம்மிடம் இல்லை. ஈர்ப்பு மற்றும் ஆளுமை போன்றவற்றால் அவர்களுக்கு நிகரான தலைவர்களை இதுவரை நாம் பெறவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான் என தெரிவித்துள்ளார்.

அயோத்தி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது., அயோத்தி விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உச்சம் தொட்ட தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த தீர்ப்பை திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன. இதன் தாக்கம் உள்ளாட்சி தேர்தலில் தெரியும், பாஜக மிகப்பெரிய வெற்றிபெறும் என தெரிவித்துள்ளார்.

Trending News