இன்னும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடர வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை இன்னும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 31, 2019, 01:41 PM IST
இன்னும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடர வாய்ப்பு title=

வடகிழக்கு பருவமழை இன்னும் 4 நாட்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு  பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும். தமிழகத்தை பொறுத்த வரை வடகிழக்கு பருவமழை கால கட்டத்தில்தான் அதிக அளவு மழை கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 147 சதவீதம் வரை பெய்ததால் தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பி, உபரி நீர் கடலுக்குள் சென்றது. இது இயல்பான அளவை விட 2 சதவீதம் அதிகமாகும். இருந்தபோதிலும் சென்னையில் இயல்பான அளவை விட 19 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய வானிலை துறை தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இயல்பை விட அதிகமாக மழை இந்த 6 மாவட்டங்களில் பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இன்னும் நான்கு நாட்களுக்கு தொடர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News