பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த நாகர் கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை!

Nagercoil Kasi: நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jun 14, 2023, 06:27 PM IST
  • 120க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டியவன் காசி.
  • ஜாமீன் மனு கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
  • காசிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்த நாகர் கோயில் காசிக்கு ஆயுள்  தண்டனை! title=

பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் ஏமாற்றி வந்தவர், நாகர்கோயில் காசி. இவர், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஏமாந்த பெண்களிடம் பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டி மீண்டும் பணம் பெறுவது என குற்றச்செயல்களில் இந்த ஆள் ஈடுபட்டு வந்தார். 

ஆபாச படம்..பணம் பறிப்பு..

காசியினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதில், முக்கியமாக நாகர்கோவிலைச் சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் காசி கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில்  மாணவிகள் உட்பட ஏராளமான இளம் பெண்களை காசி காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காசி மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பாய்ந்தன. 

தந்தையும் சிக்கினார்..

இந்த வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டுள்ளது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மிக முக்கிய ஆதாரங்களைக் கொண்ட அந்த படங்களை யார் அழித்திருக்கக்கூடும் என்று விசாரிக்கையில், காசியின் தந்தை தங்கபாண்டியன் சிக்கினார். அவர் தனது மகனின் மொபைலில் இருந்த ஆதரங்களை அழித்ததற்காக போலீஸில் மாட்டினார். பின்னர் அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் படிக்க | Samantha: ஒரு தொடரில் நடிக்க சமந்தாவிற்கு இத்தனை கோடி சம்பளமா..!

ஆயுள் தண்டனை:

காசி, ஜாமீன் மனுவோடு பல்வேறு கோர்ட் படிகளை ஏறி இறங்கினார். இவர் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததால் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது. போதாக்குறைக்கு பத்திரிகையாளர்கள் போட்டோ எடுக்கையில் ஹார்டீன் வேறு காண்பித்தார். இதனால் இவருக்கு பலர் ஜாமீன் வழங்கவே கூடாது என கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று இவரது வழக்கு விசாரணை நாகர்கோவில் விரைவு நீதிமன்றத்தில் நடிஅப்பெற்றது. அப்போது காசி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதிசெய்யப்பட்டதால் இவருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | கோடிகளில் புரளும் ஆதிபுருஷ் நடிகர்கள்..ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய தொகை சம்பளமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News