மைலாப்பூரை நடுங்க வைத்த இரட்டை கொலை - 1000 சவரன் நகை, 50 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னை மயிலாப்பூரில் 1000 சவரன் தங்க நகை மற்றும் 50 கிலோ வெள்ளிப்பொருட்களுக்காக தம்பதி இருவர் கார் ஓட்டுநரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 8, 2022, 02:42 PM IST
  • மைலாப்பூரில் அரங்கேறிய இரட்டை கொலை
  • 1000 சவரன் நகை மற்றும் 50 கிலோ வெள்ளி பறிமுதல்
  • விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
மைலாப்பூரை நடுங்க வைத்த இரட்டை கொலை  - 1000 சவரன் நகை, 50 கிலோ வெள்ளி பறிமுதல்  title=

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் (60)- அனுராதா(55) தம்பதி. தொழிலதிபரான ஸ்ரீகாந்த், மனைவியுடன் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவிலுள்ள தனது மகளின் பிரசவத்திற்காக சென்றிருக்கிறார். குழந்தை பிறந்து 3 மாதங்களாக அங்கேயே இருந்தவர்கள் நேற்று காலையில் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய இருவரையும் அவரது கார் ஓட்டுநர் லால் கிருஷ்ணா அழைத்து கொண்டு வீட்டில் இறக்கி விட்டிருக்கிறார்.

லால் கிருஷ்ணா, இரட்டை கொலை, மைலாப்பூர், Murder,Crime,Mylapore,Double murder,ஸ்ரீகாந்த் கொலை, அனுராதா,srikanth murder,anuradha murder

அங்கு வைத்து லால் கிருஷ்ணா தனது நண்பர் ரவியுடன் சேர்ந்து ஸ்ரீகாந்த், அனுராதா இருவரையும் கொடூரமாக தாக்கி வீட்டிலேயே கொலை செய்தனர். ஏற்கனவே வீட்டிலிருந்த நகைகளை மூட்டை கட்டி வைத்திருந்தவர்கள் கணவன் மனைவி இருவரையும் விடியும் முன்னர் ஒன்றாக புதைப்பதற்கு முடிவு செய்தனர். அதற்காக தொழில் அதிபர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமாக கிழக்கு கடற்கரை சாலையின் சூலேரி காட்டில் உள்ள பிரமாண்ட பண்ணை வீட்டை தேர்வு செய்தனர். காரிலேயே 2 பேரின் உடல்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு சென்றவர்கள் இரு உடல்களையும் பண்ணை வீட்டில் பெரிய குழி தோண்டி புதைத்தனர். 

லால் கிருஷ்ணா, இரட்டை கொலை, மைலாப்பூர், Murder,Crime,Mylapore,Double murder,ஸ்ரீகாந்த் கொலை, அனுராதா,srikanth murder,anuradha murder

அதன் பின்னர், அங்கிருந்து காரில் தப்பித்த இருவரும் நேபாளம் தப்பியோட முயன்றனர். இதற்கிடையே, சென்னை திரும்பிய தாய்,தந்தைக்கு அவர்களது மகள் செல்போனில் தொடர்புகொள்ள போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. பதறியவர் உறவினர் ஒருவரை அனுப்பி வீட்டில் பார்க்க சொல்ல வீடும் பூட்டி கிடந்தது. உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விசாரணை தொடங்கப்பட்டது. 

கொள்ளையடித்த நகைகளோடு கிருஷ்ணா, ரவி இருவரும் நேபாளம் தப்பியோட முயன்றது விசாரணையில் தெரியவந்தது. உடனே ஆந்திர போலீசாரின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். அதில், கொள்ளை அடித்த நகைகளுடன் தப்பிச் சென்ற லால் கிருஷ்ணா மற்றும் அவரது நண்பர் ரவி இருவரும் ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து ஆந்திர போலீசாரிடம் பிடிபட்டனர். பின்னர் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்து லால் கிருஷ்ணா மற்றும் ரவி இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதனையடுத்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் நகை மற்றும் பணத்திற்காக ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

லால் கிருஷ்ணா, இரட்டை கொலை, மைலாப்பூர், Murder,Crime,Mylapore,Double murder,ஸ்ரீகாந்த் கொலை, அனுராதா,srikanth murder,anuradha murder

இதைத் தொடர்ந்து இன்று காலை இருவரின் உடல்களும் புதைக்கப்பட்ட பண்ணை தோட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்போடு கொலையாளிகளை அழைத்துச் சென்றனர். அங்கு உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை கொலையாளிகள் அடையாளம் காட்ட, தொழில் அதிபர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. பின்னர் பிரேத பரிசோதனைக்காக இருவரின் உடல்களும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.  

லால் கிருஷ்ணா, இரட்டை கொலை, மைலாப்பூர், Murder,Crime,Mylapore,Double murder,ஸ்ரீகாந்த் கொலை, அனுராதா,srikanth murder,anuradha murder

மேலும் படிக்க | மலேசியா பெண்ணை ஏமாற்றிய நெல்லை இளைஞர் - வசமாக சிக்கியது எப்படி?

இதனையடுத்து இரட்டை கொலை செய்த கொடூர கொலையாளிகள் லால் கிருஷ்ணா மற்றும் ரவி இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட சுமார் 1,000 சவரன் தங்க நகைகள், சுமார் 50 கிலோ வெள்ளிப்பொருட்கள், 2 செல்போன்கள் மற்றும் இன்னவோ கார் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் மற்றும் திருட்டு வழக்காக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கினை ஆதாய கொலை வழக்காக மாற்றம் செய்து மைலாப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | கள்ளக்காதலனுக்காக கணவரை தீர்த்து கட்டிய கொலைக்கார மனைவி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

 

 

 

Trending News