TN Weather: 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 29, 2021, 08:42 PM IST
  • வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.
  • அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
  • கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.
TN Weather: 5 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் title=

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் (Tamil Nadu) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள், அதாவது ஜூலை 3 ஆம் தேதி வரை  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ:TN Weather: இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்-IMD 

30 ஆம் தேதி, அதாவது நாளை, திண்டுக்கல், தெங்காசி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் (Chennai) பொறுத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில  இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள், அதாவது, ஜூலை 1 ஆம் தேதியும், 2 ஆம் தேதியும் சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை (TN Rain) பெய்யக்கூடும் என்றும் 3 ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 5 செமீ மழையும்,  கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 1 சென்டிமீட்டர் மழையும் பெய்தது. சென்னையிலும் கடந்த இரு நாட்களாக சில இடங்களில் இடைவிடாது மழை பெய்தது. 

ALSO READ: TN Weather: அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News