குருமூர்த்தி என்ன தேவதூதரா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி?

குருமூர்த்தி சொன்ன படியெல்லாம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற அவர் என்ன தேவதூதரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.  

Last Updated : Jan 15, 2018, 11:09 AM IST
குருமூர்த்தி என்ன தேவதூதரா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி? title=

பாஜகவும், ரஜினியும் இணைந்தால் தமிழகதலையெழுத்தை மாற்ற முடியும் என பேசிய குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

சென்னை ஆழ்வார் பேட்டையில் துக்ளக் இதழின் 48-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆடிட்டர் குருமூர்த்தி பேசும் போது ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் எனக் கூறியிருந்தார். 

மேலும் அவர், தமிழக அரசியலில் ரஜினிக்கு சிறந்த வாய்ப்பு இருக்கிறது. கழகங்களுடன் கூட்டணி வைக்காமல் ரஜினி வகுத்த செயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல், இது கழக கட்சிகளை போல் தன்னு டைய ஆட்சி இருக்காது என்பதை காட்டுகிறது. கழகங்களின் தொடர்ச்சியாகவே கமல் அரசியலுக்கு வருகிறார் எனத் தெரிகிறது என கூறினார்.

அவரது இந்த பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், திமுக தொடர்பாக குருமூர்த்தி தெரிவித்த கருத்துடன் உடன்படுகிறேன்.

குருமூர்த்தி சொல்வதெல்லாம் நடக்க அவர் என்ன தேவதூதரா? ரஜினியுடன் பாஜக கூட்டணி வைத்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும் என்றார்.

Trending News