MGR நூற்றாண்டு விழா: அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு

சென்னையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Sep 30, 2018, 12:37 PM IST
MGR நூற்றாண்டு விழா: அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவு title=

சென்னையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற இருக்கும் நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று மாலை நடைபெறுகிறது. இந்த விழா இன்று மாலை 3:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்கள் அனைத்தையும் அகற்ற உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் மாநகரக் காவல்துறை அக்டோபர் 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

Trending News