மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு!

கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

Last Updated : Feb 8, 2018, 04:08 PM IST
மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவு! title=

கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மணிக்கணக்கில் போராடி தீயை அணைத்தனர். மேலும் சில பகுதிகள் தீ விபத்தால் இடிந்து விழுந்தன. இதனால் கோவிலின் ஒருபகுதி சேதம் அடைந்துள்ளது.

இந்த தீவிபத்து குறித்த காரணத்தை கண்டறிய 12பேர் கொண்ட நிபுணர்கள் குழு கோயிலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த ஆய்வுக்கு பின்னர் கோயிலை சீரமைக்கும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் இருக்கும் 115 கடைகளை நாளை 12 மணிக்குள் அகற்ற வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Trending News