புதிய கல்விக் கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ தாக்கு...

வியாழனன்று மாநிலங்கள் அவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

Last Updated : Nov 21, 2019, 02:11 PM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து மாநிலங்களவையில் வைகோ தாக்கு... title=

வியாழனன்று மாநிலங்கள் அவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

மாநிலங்களவையில் அவர் பேசியதாவது., அவைத்தலைவர் அவர்களே, நீங்களும், நானும், பல்லாயிரக்கணக்கானவர்களும் நெருக்கடி நிலை காலத்தில் கொடும் சிறைகளில் வாடியபோது, இந்தக் கல்வித் துறையை மாநிலப் பட்டியலில் இருந்து எடுத்து, பொதுப்பட்டியலுக்கு மாற்றி, அதிகாரங்களை மத்திய அரசு கபளீகரம் செய்துகொண்டது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை ஆகும்.

நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

இதனிடையே இந்தியா முழுவதும் கல்வியாளர்களோடு நாங்கள் விவாதங்கள் நடத்தி இருக்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து பேசிய வைகோ, எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. என் கேள்விக்குப் பதில் இல்லையே! என குறிப்பிட்டார்.

இதனிடையே அவைத் தலைவர், வைகோவின் வாய்ப்பு முடிந்துவிட்டது எனவும்,  மூத்த உறுப்பினர், இதற்குமேல் வாய்ப்பு கேட்கக்கூடாது எனவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வைகோ., உறுப்பினரின் உரிமையையும் தாங்கள்தானே காக்க வேண்டும். என் கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்லவே இல்லையே! என கேள்வி எழுப்பினார். என்றபோதிலும் அவரது கேள்விக்கு அவையில் பதில் கிடைக்கவில்லை.

Trending News