நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 தேர்தல்!

2019 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

Last Updated : Mar 10, 2019, 06:29 PM IST
நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 தேர்தல்! title=

2019 நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ல் தேர்தல் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  
 
ஏப்ரல் 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 18-ம் தேதி இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெறுகிறது.
ஏப்ரல் 23-ம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
ஏப்ரல் 29-ம் தேதி நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
மே 6-ம் தேதி ஐந்தாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
மே 12-ம் தேதி ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது
மே 19-ம் தேதி ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 18-ம்  வாக்குப்பதிவு நடைபெறும். புதுச்சேரியிலும் அன்றைய தினமே வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ம் தேதி தொடங்குகிறது. தாக்கலுக்கான கடைசிநாள் மார்ச் 26. வேட்புமனு திரும்பப்பெறும் கடைசி நாள் மார்ச் 29-ம் தேதியாகும். 

Trending News