அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் - டிடிவி தினகரன் பேச்சு!

அம்மா நாம்மொடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார். அம்மாவின் பெயரைச் சொல்லி பொதுமக்களை எடப்பாடி ஏமாற்றி வருகிறார் என ஸ்ரீவைகுண்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2024, 10:01 AM IST
  • அம்மா நாம்மொடு இல்லை.
  • அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார்.
  • டிடிவி தினகரன் பேச்சு.
அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார் - டிடிவி தினகரன் பேச்சு! title=

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் உள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலனை ஆதரித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகை தந்தார். அவரை மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பூக்கள் தூவி ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பு அளித்தனர். பேசத் தொடங்குவதற்காக இன்றைய டிடிவி தினகரன் இடம் வாலிபர் ஒருவர் தங்களது கையை கொடுக்க சொன்னார். கை எனக்கு வேண்டும். அதை எல்லாம் கொடுக்க முடியாது என அருகே நின்று கை கொடுக்க முயன்ற இளைஞரிடம் சிரித்தபடி கூறினார் டிடிவி தினகரன்.

மேலும் படிக்க | சின்னம் பார்த்து வாக்களிக்காதீர்கள் - பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் வேண்டுகோள்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிற பெரும்பாலான கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். அம்மாவின் பெயரை சொல்லி பொதுமக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக கூட்டணியில் யார் போட்டிகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை. இந்த தேர்தலில் திமுக சார்பில் ஒரு குடும்பம் போட்டியிடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் 2019 திரும்ப வரும் என்று நினைத்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் எடப்பாடி மீது இருந்த அதிருப்தில் பொதுமக்கள் வாக்களித்தார்கள். ஆனால் இந்த முறை அது நடக்காது. திமுக அரசு தகுதியுள்ள அனைவருக்கும் 1000 என்று கூறியது. ஆனால் அதன் பின்னர் நடந்தது வேறு. 

இந்த ஆயிரம் ரூபாய் வழங்குவதில் தமிழ்நாடு பெண்கள் திமுக மீது கோபமாக இருக்கிறார்கள். குட்டி ஸ்டாலின் உதயநிதி தனது தாத்தா, அப்பாவை தாண்டி விட்டார். விளையாட்டு அமைச்சர் என்று கிண்டலாக பேசினார். அம்மா மாதிரி இரும்பு மனிதர் மோடி அவர்கள். தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பக்கம் திரும்பி பார்க்கவில்லை. அதற்கு காரணம் மோடி அவர்கள் தான். கொரோனா காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்கியது. மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்தது இந்தியா. மற்ற நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து தடுப்பூசி தயாரித்து வழங்கியது இந்தியா. விளையாட்டு முதல் விண்வெளி வரை இந்தியா முன்னேறி உள்ளது. இந்தியாவைக் கண்டு சீனா காரன் பயப்படுகிறார். மூன்றாவது முறையாக மீண்டும் மோடி வருவார்.

14 வருடங்களுக்கு முன்பு தேனியில் மக்கள் பணியாற்றினேன். தற்போது மீண்டும் 14 வருடம் கழித்து தேனி சென்றபோது கூட அந்த பகுதி மக்கள் என்னை மறக்கவில்லை. நான் செய்த பணிகளை மக்கள் எனக்கு நியாபப்படுத்தினார்கள். தேனி மக்களுக்கு TTV தினகரன் தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். அம்மா நம்மோடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி அவர்கள் இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு வேண்டிய திட்டங்களை நிச்சயம் பெற்று தருவார்கள். உண்மையான மக்களாட்சி உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் வாக்களியுங்கள் என்று பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

மேலும் படிக்க | அதானிக்காக இலங்கையிடம் பேசிய மோடியே மீனவர்களுக்காக பேசுனீங்களா? உதயநிதியின் 11 கேள்விகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News