“ஜாபர் சாதிக்கை காணவில்லை” சாதிக்கின் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!

Jaffer Sadiq Latest News Tamil : கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் காணவில்லை என்று அவரது வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார், முழு விவரம் என்ன?   

Written by - Yuvashree | Last Updated : Mar 11, 2024, 07:37 PM IST
  • போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்
  • காணவில்லை என அவரது வழக்கறிஞர் புகார்
  • என்ன நடந்தது? முழு விவரம்!
“ஜாபர் சாதிக்கை காணவில்லை” சாதிக்கின் வழக்கறிஞர் பரபரப்பு புகார்!  title=

Jaffer Sadiq Latest News Tamil : கைது செய்யப்பட்ட 4வது சந்தேக நபரான சாந்தோம் பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான் என்ற பெசோஸ், 35, என்பவரின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன், தனது கட்சிக்காரரை காணவில்லை அவரைக் கண்டுபிடித்து தரும்படி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

"தனக்கு தெரிந்த தில்லி  வழக்கறிஞர் மூலம் சாதிக்கின் இருப்பிடத்தை சரிபார்க்க டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்திற்குச் சென்றார். சாதிக் சென்னை என்சிபி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் அவரிடம் கூறியிருக்கின்றனர்." 

"நான் சென்னையில் உள்ள என்சிபி அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​எனக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை, சாதிக்கைச் சந்திக்க என்னை அனுமதிக்கவில்லை" என வழக்கறிஞர் பிரபாகரன் கூறியிருக்கிறார். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் போது அவரது வழக்கறிஞர் சம்பத்தப்பட்ட நபரை  தினமும் குறிப்பிட்ட நேரம் சந்திக்கலாம் என விதிமுறை உள்ளது.

மேலும் படிக்க | ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமானவர்கள்... பாஜக, அதிமுகவில் உள்ளனர் - அமைச்சர் ரகுபதி அதிரடி

முழு பின்னணி என்ன?

ஜாபர் சாதிக் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. ஜாபர் சாதிக் கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப்பொருளை கடத்தியுள்ளார். ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என ஞானேஷ்வர் தெரிவித்தார். மெத்தம்பெட்டமைன் தயாரிப்பின் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை என்றும்  குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததை தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் ஞானேஷ்வர் இந்த கைது குறித்து இன்று பத்திரிக்கையாளர்களை அப்போது சந்தித்து பேசினார். அதில் அவர், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமான தொழிலில் முதலீடு செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | போதை பொருள் கடத்தில் பணத்தில் ஜாஃபர் சாதிக் தயாரித்த ‘மங்கை’ படம்! ரிலீஸ் ஆகுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News