ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி..

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இங்கு நடைப்பெற்ற திருவிழாவில் கோயில் பூசாரி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 23, 2024, 03:53 PM IST
  • கோயில் திருவிழாவில் பரபரப்பு
  • ரத்த குடித்த கோயில் பூசாரி
  • சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்!
ரத்தம் குடித்த பூசாரி உயிரிழப்பு! கோயில் திருவிழாவில் அதிர்ச்சி.. title=

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் செட்டியாம்பாளையத்தில் அண்ணமார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும்  மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழா கடந்த 6ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

திருவிழா தொடங்கியதுமே கோயில் பூசாரிகள் 16 பேரும் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து கரகம் பூஜை, கிளி பிடிக்க செல்லுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரண் கிடாய் பூஜை நடைபெற்றது.

இந்த பரண் கிடாய் பூஜையின் போது, கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பரண் போன்ற அமைப்பின் மீது வேண்டுதல் வைத்துள்ள பக்தர்கள் கொடுக்கும் ஆட்டு கிடாய்களை பூசாரிகள் வெட்டி, அவற்றின் பச்சை ரத்தத்தில் வாழைப்பழத்தை பிசைந்து சாப்பிடுவதும், அதை குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை, உடல்நிலை சரியாக வேண்டும் என வேண்டுதல்  வைத்துள்ள பக்தர்களுக்கு பரண் கிடாய் பூசாரிகள் வழங்குவது வழக்கம்.

அது போன்ற பரண் கிடாய் பூஜையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் கலந்து கொண்டார். இவருக்கு 45 வயதாகிறது. 

மதியம் தொடங்கிய பரண் கிடாய் பூஜையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கிடாயின் பச்சை ரத்தத்தை பழனிச்சாமி உட்பட 5 க்கும் மேற்பட்ட பூசாரிகள் குடித்தும், வாழைப்பழத்தை ரத்தத்துடன் கலந்தும் சாப்பிட்டு உள்ளனர்.

மேலும் படிக்க | மே 25இல் உருவாகும் புதிய புயல்... வங்கக் கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி - பாதிப்பு இருக்குமா?

சிறிது நேரத்தில் பழனிச்சாமிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் மயங்கி விழுந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், தொடர்ந்து அவரது உடல் கோபி அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்விற்காக கொண்டு செல்லப்பட்டது,

கோயில் திருவிழாவில் உயிரிழந்த பழனிச்சாமி வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவியும், பிரபுகுமார், திணேஷ் என்ற இரு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது, இதுகுறித்து சிறுவலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | பெளர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் தள்ளுமுள்ளு.. ரயிலில் பரபரப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News